21 வயசு தான் ஆச்சு... இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.. கதறி துடித்த பெற்றோர்!!

 
ஸ்வேதா

சென்னை  ஆவடி  திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர்   முருகன். இவரது மனைவி சுபா. இவர்களின் மகளான ஸ்வேதா. இவர்  சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை முடித்துவிட்டு  பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு சென்று வந்தார்.  இதுவரை எங்கும் வேலை கிடைக்கவில்லை.    நேற்று முன்தினம் அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்ற அவர், இதிலும் தேர்வாகாமல்  சோர்வாக வீடு திரும்பியுள்ளார்.

ஸ்வேதா

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா தாய் சுபாவிடம் போனில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றார்.  வீட்டிற்கு அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறித்துடித்தனர்.   தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆம்புலன்ஸ்


போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதா பள்ளி அளவில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்தவர்  படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருந்ததால் விரக்தி அடைந்துவிட்டார்.  அவருடைய  தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web