22 ஆண்டுகள் சிறை!! சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

 
ஜெயராமன்


காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதிக்குட்டபட்ட கீழபொன் பேத்தி சேவகன் பேட்டையில் வசித்து வருபவர் ஜெயராமன். பெயிண்டராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவரை ஜெயராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடந்துள்ளது.

பாலியல் கற்பழிப்பு செக்ஸ் பலாத்காரம்
இது குறித்த எழுந்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கு காரைக்கால் போக்சோ சிறப்பு நீதிமன்றத்திவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

court order

இந்நிலையில் மாவட்ட நீதிபதி அல்லி பாபு கூறிய தீர்ப்பில், ‘‘குற்றவாளியான ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் என மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அதிரடி தீர்ப்பளித்தார். மேலும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் அபராதத்தை கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 2 ஆண்டுகள் கழித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் 22 ஆண்டுகள சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web