இரவு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புங்க!
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, 18-ஆம் தேதி வாக்கில் கேரளா–கர்நாடக கடலோர பகுதிக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும். இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் பல இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி–மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டபடி, இன்று இரவு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது: அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம். மாவட்டங்களில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
