2500 பயணிகள் கடும் அவதி... சிக்னலில் நிறுத்திவிட்டு இறங்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர்கள்... !!

 
ரயில்

உத்தரபிரதேச மாநிலத்தில்  திடீரென 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  சஹர்சா-படெல்லி இடையே புதன்கிழமை   சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இந்த 2  சிறப்பு ரயில்களை வடகிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது.

ரயில்

இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  புர்வால் சந்திப்பில் பிற்பகல் 1.15க்கு  சஹர்சா ரயிலின் ஓட்டுநர் பணி முடிந்து விட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து மாலை 4 மணியளவில் புர்வால் சந்திப்பிற்கு வந்த பரோனி ரயில் ஓட்டுநரும் பணி முடிந்து விட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.  இந்த ரயில் ஏற்கனவே சுமார் 5:30 மணி நேரம் தாமதமாக  வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

ரயில்கள்
சஹர்சா ரயிலின் மொத்த பயண நேரம் 25 மணி நேரம். 3வது நாளாக  பயணிகள், ரயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில்  ரயிலில் குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் உட்பட  அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். சிறப்பு ரயில் என்பதால் அதிக கட்டணம் செலுத்தி இந்த ரயிலில் பயணித்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.இது குறித்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், கோண்டா சந்திப்பிலிருந்து பணியாளர்களை அனுப்பி, ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.  இரு ரயிலின் ஓட்டுநர்களும், தூக்க கலக்கத்தில் இருந்ததால், பணியை அத்துடன் முடித்துக்கொண்டனர்.   இச்சம்பவம், ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web