29 ஆண்டு சிறை!! 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

 
ராஜமாணிக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமத்தில்  15 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறமி வசித்து வருகிறார். இவரை கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேரந்த மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் என்ற 70 வயதான முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுமியின் தாய், மேல் மருத்துவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

ராஜமாணிக்கம்

வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜமாணிக்கத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

போக்சோ

இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில், அதிரடி தீர்ப்பை போக்சோ நீதிமன்றம் வழங்கியது. அதன்படி, குற்றவாளி ராஜமாணிக்கத்திற்கு 3 பிரிவுகளின் கீழ் 29 ஆண்டு ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.மனநலம் குன்றிய சிறுமி என்றும் பார்க்காமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web