கார் கதவை திறக்க தெரியாமல் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி!! கரைய வைக்கும் சோகம்!!

 
குழந்தைகள்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்  நாகராஜன். இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் நித்திஷா  என்ற மகளும், 4 வயதில் நித்திஷ்  என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பவர். இவரது பக்கத்து வீட்டில் உறவினர் சுதனின்  4 வயது  மகன் கபிசாந்த் உடன் விளையாடுவர். நாகராஜனின் வீடு அருகே அவரது அண்ணன் மணிகண்டனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

கார்

இந்த காரை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். இந்த காரின் வெளியே அமர்ந்து நித்திஷா, நித்திஷ் இருவரும் கதை பேசி விளையாடிக் கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதே போல் நேற்று பிற்பகல் குழந்தைகள் நித்திஷா, நித்திஷ், கபிசாந்த் ஆகியோர் காரில் விளையாட சென்றனர். 3 கதவுகள் மூடப்பட்டு இருந்தது. ஒரு கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த கதவின் வழியாக 3 குழந்தைகளும் காருக்குள் சென்று விளையாடினர். திடீரென  அந்த கதவு எதிர்பாராதவிதமாக மூடிவிட்டது.

திறக்கத் தெரியாத குழந்தைகள் மூவரும் காருக்குள் மாட்டிக் கொண்டனர்.  சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி 3 குழந்தைகளும் அடுத்தடுத்து மயங்கி காருக்குள் விழுந்தனர்.விளையாடச் சென்ற குழந்தைகளை வெகு நேரம் ஆகியும் காணாததால் பெற்றோர்கள் வெளியே வந்து தேடத் தொடங்கினர். குழந்தைகள் எங்கு சென்றனர் என்பதே தெரியவில்லை. கடைசியாக காரில் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு 3 குழந்தைகளும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காரின் கதவை திறந்து பார்த்தனர். 3 குழந்தைகளும் பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து உடனடியாக 3 குழந்தைகளையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருநெல்வேலி

மருத்துவமனையில் குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்பவர் மனதை கரையவைத்தது. 3 குழந்தைகளின் உடல்களும் வெப்பத்தால் ஆங்காங்கே வெந்துபோய் இருந்தது. இச்சம்பவத்தை அறிந்த சபாநாயகர் அப்பாவு பணகுடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று  பலியான குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பணகுடி அருகே விளையாடியபோது காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web