புதுச்சேரியை 3 புயல்கள் தாக்கும் அபாயம்... வானிலை மைய எச்சரிக்கை!

 
புயல்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக மழையுடன் அமைய வாய்ப்புள்ளதாக புதுச்சேரி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், “புதுவையில் ஆண்டுதோறும் சராசரியாக 1,330 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. இதில் பெரும்பாலான மழை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் தான் பதிவாகிறது.

புயல்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்திலேயே இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பை விட 173.4 மி.மீ. அதிகம். தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையும் அதிக மழையுடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்துகூறுகையில், “இந்த ஆண்டு அக்டோபர் 3-வது வாரத்திலிருந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை 2 முதல் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

இதனால், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?