கடலில் மாயமான சிறுவர்கள்.. மூன்று பேரில் ஒருவரின் சடலம் மீட்பு..!

 
சந்தோஷ்

கடலில் குளித்துக் கொண்டிருந்த  3 மாணவர்கள் மாயமான நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷியாம் (வயது 17), சந்தோஷ் (வயது 17), புவனேஷ் (15 வயது), விஜய் (15 வயது). இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று திருவொற்றியூர் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற மூவர் மாயம்.

அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்து சிறுவன் விஜய்யை மட்டும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் மற்ற மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்பட்ட நிலையில், சந்தோஷ் (17) என்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web