தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்!!
செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேட்டில் இருந்து சென்னை வில்லிவாக்கம் நோக்கி வேன் ஒன்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது திண்டிவனத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று வேன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வேன் இடதுபுறமாக செல்ல அதற்கு முன் சென்று கொண்டிருந்த கேஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!