பார்பிக்யூவில் உறவினர்களை அழைத்து ட்ரீட் வைத்த புது மாப்பிள்ளை.. 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

 
கோல் பார்பிக்யூ

பிரபல கோல் பார்பிக்யூ உணவகத்தில் சாப்பிட்ட 30 30க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை குன்றத்தூர் அஞ்சுகம் நகரில் வசிப்பவர் ஷேக் ஜலாலுதீன்(36) இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததை அடுத்து, தன் உறவினர்களுக்கு உணவு விருந்து அளிக்க முடிவு செய்தார்.

hotel

இதனால் நேற்று இரவு சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல கோல் பார்பிக்யூ உணவகத்தில் உணவுக்கு முன்பதிவு செய்துள்ளார். அங்கு தனது உறவினர்கள் 62 பேருடன் சாப்பிட சென்றார்.அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்ட நிலையில், சாப்பிட்ட சில மணி நேரத்தில் உறவினர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளச்சேரியில் கோல் பார்பிக் உணவகத்தில் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உணவக மேலாளரிடம் விசாரணை நடத்தி உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 
From around the web