32 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!! சங்கர் ஜிவால் உத்தரவு!!
சென்னையில் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
நீலாங்கரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமாரும், இசக்கிபாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பரங்கிமலை சட்டம்&ஒழுங்கு பிரிவுக்குக்கு கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த செல்லப்பா மாற்றப்பட்டுள்ளார். புளியந்தோப்பு சட்டம்& ஒழுங்கு பிரிவுக்கு புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம்&-ஒழுங்கு பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவுக்கு அண்ணாநகர் சட்டம்& ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபுவும் என மொத்தம் 32 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனும், மேலும் தேவைப்படும் சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஒரேநாளில் 32 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!