ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் பலி!! மக்களே உஷார்!!

 
கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இருப்பினும் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கடும் கொரோனா விதிகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 18,930 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதன் எண்ணிக்கை 18,815 ஆக குறைந்து பதிவாகி உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா
மேலும் நேற்று 35 பேர் கொரோனா நோய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,25,343 ஆக பதிவாகி உள்ளது. 15,899 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,29,37,876 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி 1,22,335 ஆக அதிகரித்துள்ளது. நாளை இதன் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா
இந்தியாவில் இதுவரை 1,98,51,77,962கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும்  நேற்று ஒரே நாளில் 17,62,441 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web