தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி 3 நாள் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!
பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்தது திருவள்ளூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிரம் ஆயில்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்–பிரெய்சி தம்பதியினர் திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிரெய்சி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது திடீரென குழந்தை மயக்கமடைந்து மூச்சுவிடாமல் இருந்தது. அதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டாபிரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
