அடி தூள்!! 3 வது தங்கப்பதக்கம்!! துப்பாக்கி சுடுதலில் இந்தியா சாதனை!!!

 
அர்ஜுன்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் திறமையாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் உள்ள சாங்வோன் நகரில் நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி தொடங்கிய இப்போட்டி வருகிற 21ம் தேதி வரை நடைபெறுகிறது. பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

அர்ஜுன்

இந்நிலையில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த போட்டி தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் அர்ஜூன் பபுதா, சாஹ துஷார் மானே, பாரத் மஹிஜா ஆகியோர் அடங்கிய இந்திய அணி கொரியாவை எதிர்த்து விளையாடியது. 17&15 என்ற செட் கணக்கில் கொரியாவை தோற்கடித்த இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இந்த போட்டித் தொடரில் இந்தியா வெல்லும் 3வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன்
இதற்கு முன்னர் கடந்த 13ம் தேதி நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 2வது தங்கத்தை இந்தியா வென்றது. இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி 17-13 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெஸ்ஜாரோஸ்-இஸ்வான் பெனி இணையை வீழ்த்தியதன் மூலம் தங்கப்பதக்கத்தை வென்றது. ஏற்கனவே 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுடா தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் தங்கப்பதக்க வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web