9 வயசு... 3 ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு... பகீர்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது மான்போர்டு பள்ளி. இந்த பள்ளியில் 9 வயதான மான்வி சிங் என்ற சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் சக மாணவிகளுடன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.

அதாவது விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
