சாக்லேட் வாங்கி கொடுத்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. கூலித்தொழிலாளி போக்சோவில் கைது.!

 
பாலியல் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சந்திரன் (43). இவரது மனைவி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இரண்டு வார காலமாக வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிய 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் சந்திரனை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை செய்ததில் இரண்டு வார காலத்தில் மேலும் இதேபோல் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சந்திரனை கைது செய்த மகளிர் காவல் துறையினர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web