ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை!! பரபரப்பு!!

 
4 பேர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவருடைய மகன் செந்தில்குமார் .  இவர் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  இவருடைய சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ்.   இவரது தாயார் புஷ்பவதி. புஷ்பவதியும் அவரது அக்காவும் அடுத்தடுத்து   கள்ளக்கிணறு பகுதியில்  வசித்து வந்தனர்.நேற்று இரவு  செந்தில்குமார் வீட்டில் இருந்த போது மர்மகும்பல் ஒன்று செந்தில்குமாரை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. காப்பாத்துங்க என்ற அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பதற்றத்துடன் ஓடிவந்த மோகன்ராஜ்   செந்தில்குமாரை காப்பாற்ற அவர் முயன்றார்.

காவல்

ஆனால்  செந்தில்குமாரை வெட்டி சாய்ந்த மர்ம கும்பல் காப்பாற்ற வந்த  மோகன்ராஜையும் வெட்டிச் சிதைத்தது. மோகன்ராஜின் அலறல் குரல் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்கா  ரத்தினாம்மாள் ஆகியோர் அங்கு ஓடி வந்துள்ளனர். அவங்கள விட்டுடுங்க எனக் கதறினர்.  பெண்கள்  கதறல் கேட்டும் அவர்களை விட்டபாடில்லை.  பெண்கள் என்றும் பாராமல் இருவரையும் வெட்டிசாய்த்தது. அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  4 பேரின் உடல்களையும் தெருவில் தூக்கி சிதறடித்து விட்டு மர்மகும்பல் தப்பியோடியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறித் துடித்தவாறு காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.  


இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி  சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க   முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கொலையாளிகளை கைது செய்த பின்னர் தான் உடல்களை எடுக்க விடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய போலீஸார்,  உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 ஆம்புலன்ஸ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே நேரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட காரணம் என்ன என்பது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரிடம் ஓட்டுனராக பணிபுரிந்தவர் குட்டி என்ற வெங்கடேசன்.இவர், தனது சகாக்களுடன் வந்து இந்த கொலையைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  செந்தில்குமாரின் வீட்டுக்கு அருகில்  அந்த கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தது.  அதை தட்டிக் கேட்டபோது தான் செந்தில்குமாரை அவர்கள் கொலைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.  இந்த கொலைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web