பரபரப்பு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குத்திக் கொலை...!!

 
அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில்  குயின்ஸ் நகரின் ஃபார் ராக்வே சுற்றுப்புறத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் தனது குடும்ப உறுப்பினர்களை தாக்கி கொல்வதாக போலீசாருக்கு 911ல் அவசர அழைப்பு வந்துள்ளது.  அதன் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், தீ வைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட வீட்டை போலீஸ் அதிகாரிகள் சோதனையிட உள்ளே சென்றனர். அப்போது, மர்மநபர் ஒருவர்  வெளியேறுவதை பார்த்துள்ளனர்.
 அமெரிக்கா
உடனே அவரை தடுத்து பேச முயன்ற போது, அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் 2 போலீஸ் அதிகாரிகளையும் குத்தியுள்ளார். இதனால் 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுக் வீழ்த்தியுள்ளார்.சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  கொண்டு செல்லும்  வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

அமெரிக்கா போலீஸ்

இதனையடுத்து  தீயணைப்பு மற்றும் மீட்பு குழு விரைந்து வந்து வீட்டிற்குள் இருந்து 12 வயது சிறுவன், 44 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் ஆகிய 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வாசலில் காயங்களுடன் நின்ற 11 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில்  சிறுமியும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்  39 வயதான கோர்ட்னி கார்டன் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web