பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ... கல்லூரி மாணவன் உட்பட 4 பேர் உடல் சிதறி பலி!!

மயிலாடுதுறை மாவட்டம் , தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் பிற்பகல் வெடிகளை பார்சல் செய்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த கோர விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 4 இளைஞர்களின் உடல் சிதறின. சிதறிய பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் கிடந்தன. தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...