படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற 4 அகதிகள் கைது!
தமிழக அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 4 இலங்கை தமிழர்கள், கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட பல இடங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தங்களது குடும்பங்களுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த முகாம்களில் தங்கி இருந்த 4 பேர் படகு மூலம் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் கடல் வழியாக கள்ளத்தனமாக சென்ற போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நால்வரும் எந்த முகாமில் தங்கி இருந்தவர்கள், அவர்கள் ராமேசுவரம் அல்லது தனுஷ்கோடி கடல் வழியாக சென்றார்களா என்கிற விவரங்களை உளவுத்துறை மற்றும் கடற்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
