அதிர்ச்சி... மேலும் 200 பேரைக் காணவில்லை... வயநாட்டில் 6 மண்டலங்களிலும் 40 குழுக்கள் தேடுதல் வேட்டையில் தீவிரம்!

 
நிலச்சரிவு
 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 300 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சாலியாரில் மட்டும் 172 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 153 உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்துள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு

சூரல்மாலா மற்றும் முண்டக்காய் பகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து இன்று தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. அட்டமலை-அரண்மலை முதல் மண்டலத்தில் உள்ளது. முண்டக்காய் மற்றும் புஞ்சிரிமட்டம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலத்தில் உள்ளன. நான்காவது மண்டலம் வெள்ளர்மலை கிராம சாலை. GVHSS வெள்ளர்மலை ஐந்தாவது மண்டலத்தில் உள்ளது. ஆறாவது மண்டலம் சூரல்மலையின் அடிப்பகுதி.

சூரல்மலையில் தற்போதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பேரிடர் குப்பைகளில் இருந்து 10-12 அடி தூரத்தில் மனித உடல் வாசனையை கண்டறியும் சிறப்பு திறன் கொண்ட நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு வரப்படுகின்றன. 

கேரள நிலச்சரிவு

போலீஸ், ராணுவம், கடற்படை, என்.டி.ஆர்.எஃப், கடலோர காவல்படை, வனத்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நான்கு சடல நாய்கள் வரவழைக்கப்பட உள்ளது. பெய்லி பாலம் தயாராக உள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பொறியியல் குழு வெறும் நாற்பது மணி நேரத்தில் பாலத்தை கட்டி முடித்தது. சூரல்மலை முதல் முண்டக்காய் வரை மீட்புப் பணிகளுக்காக கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இந்த வழியாக கொண்டு செல்லப்படும். இந்த பாலம் 24 டன் சுமை தாங்கும் திறன் கொண்டது.முண்டக்கை மற்றும் அட்டமலா பகுதிகளில் யாரும் உயிருடன் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என கேரள கர்நாடக துணைப் பகுதி பொது அதிகாரி (ஜிஓசி) மேஜர் ஜெனரல் விடி மேத்யூ தெரிவித்துள்ளார்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web