செம... உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு... ரயில்வே அதிரடி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் சமீபகாலமாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயற்கையாகவோ விபத்துக்கள் மூலமாகவோ உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது.
விபத்தில் மூளைச்சவடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக உடலில் கல்லீரல் , கணையம் இவைகளை தானம் செய்யும் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் உடல் உறுப்பு தானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு 42 நாள்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும் என இந்தியன் ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களின் பொதுநலன் கருதி விடுப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா