நாளை மறுநாள் 44 மின்சார ரயில்கள் ரத்து... இப்பவே திட்டமிட்டுக்கோங்க!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மின்சார ரயில்கள் புறநகர் பகுதிகளை இணைக்கும் பொதுபோக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதுண்டு. கல்வி மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு சிரமமின்றி விடுமுறை நாட்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!