பட்ஜெட் ஸ்பெஷல் :பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ44042/- கோடி நிதி ஒதுக்கீடு!
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு, கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு,
2030க்குள் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளின் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கீடு,
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு, ஊரகப் பகுதிகளில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ. 365 கோடி ஒதுக்கீடு,
79 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக ரூ. 3300 நிதி ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 கிராமங்களுக்கு ரூ. 1147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு நிதி ரூ.27,922 கோடி ஒதுக்கீடு. கோவளம், பெசண்ட் நகர், எண்ணூரை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு,
வடசென்னை வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கீடு, வடசென்னையில் கழிவுநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 946 கோடி ஒதுக்கீடு,
2 ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும். அடையாறு ஆற்றில் 70 கி.மீ தொலைவிற்கு கழிவுநீர் வெளித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வரும் நிதியாண்டில் புதிதாக 10000 சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் வைரலாகி வருகின்றன..
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!