மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்.... 5 நாட்கள் ஊரடங்கு!!

 
மணிப்பூர்

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த  மே மாதம்  ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. தினசரி போராட்டங்களும்,  மோதல்களும் தொடர்ந்து வருவதால்   அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த  அவ்வப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது  5   மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிஷ்ணுபூர், கக்சிங், தவுபால், மேற்கு மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் உள்ள ராணுவ தடுப்புக்களை மக்கள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 5ம் தேதி  மாலை முதல் 5 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர்
 
ஊரடங்கு உத்தரவையும் மீறி, நேற்று காலை பிஷ்னுபூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்  போலீசாரின் தடுப்புக்களை அகற்றுவதற்கு முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் வைக்க அஸ்ஸாம் ரைபிள்ஸ், மணிப்பூர் போலீசார் பல சுற்றாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

மணிப்பூர்

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்து விட்டனர். இவர்களில் சிலர் போலீசார் மற்றும் ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் பவுகாக்சோ இகாய்க்கு செல்வதை தடுத்துக் கொண்டிருந்தனர்.இது குறித்து  காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “டெல்லியில் ஜி20 நடக்கிறது. அதே நேரத்தில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   4 மாதங்களுக்கு பின்னரும் மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ மணிப்பூர் நிலைமை சாதாரணமானதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web