தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து... மத்திய அரசு உத்தரவு!

 
ஐஏஎஸ்

தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதி​காரி​களுக்கு ஐஏஎஸ் அந்​தஸ்து வழங்கி மத்​திய அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. யார் யாருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

மத்திய அரசு

இது தொடர்​பாக மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் பூபீந்​தர் பாய் சிங் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில், “தமிழ்​நாடு குடிமை​யியல் பணி அதி​காரி​களான எஸ்​.க​வி​தா, சி.​முத்​துக்குமரன், பி.எஸ்​.லீலா அலெக்​ஸ், எம்​.வீரப்​பன், ஆர்​. ரேவதி ஆகியோரை இந்​திய ஆட்​சிப் பணி (ஐஏஎஸ்) அதி​காரி​களாக குடியரசுத் தலை​வர் நியமித்​துள்​ளார்’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

ஐஏஎஸ்

பதவி உயர்வு பெற்​றுள்ள எஸ்​.க​விதா தற்​போது தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக் கழக பொது மேலா​ள​ராகவும், சி.​முத்​துக்​குமரன் பேரிடர் மேலாண்மை ஆணை​ய இணை இயக்​குந​ராக​வும், பி.எஸ்​.லீலா அலெக்ஸ் சென்னை சிப்காட் பொதுமேலா​ள​ராக​வும் எம்​.வீரப்​பன் ஒழுங்கு நடவடிக்கை ஆணை​ய​ராக​வும், ஆர்​.ரேவதி கங்​கை​கொண்​டான் சிப்​காட் மாவட்ட வரு​வாய் அதி​காரி​யாகவும் (நிலஎடுப்​பு) பணி​யாற்றி வரு​கின்​றனர்​.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?