அதிகாலையில் அதிர்ச்சி... காரும், லாரியும் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.... ஒருவர் கவலைக்கிடம்... !

 
விபத்து

தெலங்கானா மாநிலம் நல்லகொண்டா பகுதியில் வசித்து வருபவர்கள் நேற்று விடுமுறை தினமானதால்  ஒரே  ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோவிலுக்கு சென்றனர்.   காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மிரியாலகுடா  பகுதியில் கார் வேகமாக சென்றதால்  பின்னால் வந்த லாரி அதிவேகமாக மோதி கோர விபத்து ஏற்பட்டது.

விபத்து

இதில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.  கோவிலுக்கு சென்று விட்டு 5 நிமிடத்தில் வீட்டிற்கு அருகே வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.  பின்னால் வந்த லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் பலியான  5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web