துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

 
அமெரிக்க போலீஸ்

பொதுமக்களை நோக்கி மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் தலைநகர் ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை நோக்கி ஒரு மர்மநபர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய பின் அந்த மர்ம நபர் தப்பியோடினார். இதனால் அங்கு இருந்த சிலர் பதறி அடித்து ஓடினர். 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரின் தீவிர நடவடிகையால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அப்பகுதியில் கைது செய்யப்பட்டார். பின் அவர் உள்ள ஒரு குடியிருப்பில் அடைக்கப்பட்டார். 

அமெரிக்க போலீஸ்

இந்த கொடூர தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஒரு அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

சர்வதேச் போலீஸ் வாகனம்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் மட்டும் 49 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 130-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் உயிரிழந்தனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web