திருமண சீர்வரிசையாக 500 சவரன் நகை, நட்சத்திர ஹோட்டல்... பிரபல நடிகை அசத்தல்.. !!

 
கார்த்திகா

தமிழ் திரையுலகில் 80களில்  மோதிரக்கையால் குட்டுப்பட்டு  முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிற்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.  மகளின் திருமணத்திற்காக சீர்வரிசையாக  500 சவரன் நகை, நட்சத்திர ஓட்டல் என  கொடுத்து அசத்தியுள்ளார் நடிகை   ராதா.

கார்த்திகா


 நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர், ஜீவா ஜோடியாக ‘கோ’ படத்தில் அறிமுகமானவர். அதன்பின் படவாய்ப்பு அமையாததால்  தனது தந்தை ராஜசேகரனின் ஓட்டல் பிசினஸை கவனிக்க சென்றுவிட்டார்.   இவரது திருமணம்  நவம்பர்  19ம் தேதி திருவனந்தபுரத்தில்  கோலாகலமாக நடந்தது. இந்த  திருமணத்தின் அலங்காரங்களும், திருமண வைபோகத்தின் ஒவ்வொரு நாளும் கார்த்திகா அணிந்த உடைகளும் நகைகளும் அசத்தலாக அமைந்திருந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர்.  

ராதா மருமகன்

இந்த திருமணத்தில் ராதாவின் நெருங்கிய உறவினர்கள்,  திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர் . இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.   திருமண சீர்வரிசையாக மகளுக்கு 500 சவரன் நகையும், நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் கொடுத்துள்ளார் நடிகை ராதா. கார்த்திகாவின் தந்தை  ராஜசேகரனுக்கு மும்பை, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்  பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web