தமிழகம் முழுவதும் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம்... அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 2011-12ம் நிதியாண்டில் 5146 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5,146 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவர்களுக்கு தற்காலிக பணியிடங்களுக்காக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இதற்கான காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது தேவை அடிப்படையில் இந்த 5,146 தற்காலிக பணி இடங்களையும் நிரந்தரமாக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது.
இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா