க்யூட் வீடியோ... பிறந்த குழந்தை 2 கைகளால் இரும்பு தட்டை தூக்கும் ஆச்சர்யம்!! 5 G லான்ச் பாய்!!
புத்தம் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை பிறந்த உடனேயே போட்ட இடத்தில் கிடக்கும். 4 மாசம் வரை பச்சப்பிள்ளையை நாய்கூட காக்கும் என்பது பழமொழி. அந்த அளவுக்கு பசிக்கு கொடுத்து படுக்க வைத்தால் போதும் எந்த எதிர்ப்பையும் காட்டாது. ஆனால் மாறிவரும் உலகில் எல்லாமே மாற்றம் தான். மருத்துவமனையில் நர்ஸ் புதிதாகப் பிறந்த குழந்தையை இரண்டு கைகளாலும் தூக்கி பிடிக்கிறார்.
*चन्द्रयान के चन्द्रमा पर पहुँचते ही भारत में जन्मा Real "बाहुबली"* 🚩💪💪🚩 pic.twitter.com/KGHQlowtqJ
— तिवारी दद्दा 🤗 (@bhakttrilokika) August 24, 2023
அந்த குழந்தை அருகில் உள்ள இரும்பு தட்டை சேர்த்து தூக்கி கொண்டு வருகிறது. குழந்தையை வைத்திருக்கும் செவிலியர் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களும் குழந்தையின் வலிமையைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குழந்தை பிறந்த உடனேயே, ஒரு செவிலியர் குழந்தையை தலைகீழாக வைத்துள்ளார்.
புதிதாகப் பிறந்த குழந்தையை செவிலியர் தட்டில் இருந்து தூக்கிச் செல்லும்போது, சிறிய குழந்தை தன் 2 கைகளாலும் தட்டைப் பிடிக்கிறது. குழந்தை தட்டைக் கைவிடாமல், அதைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டு, மேலே வருகிறது. இரும்புத் தட்டைக் கூடத் தூக்கி தன் வலிமையைக் காட்டுகிறது. வீடியோவில் “5G லான்ச் பாய்” எனவும், சக்திமான் எனவும் செவிலியர் சிரித்துக்கொண்டே குழந்தையை அழைக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!