சென்னையில் அதிர்ச்சி... கஞ்சா கடத்தி விற்ற அரசு போக்குவரத்து ஊழியர்!

 
கஞ்சா விற்பனை

வடசென்னை பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் வடசென்னை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர்களை  போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முண்ணுக்கு பின் பதிலளித்ததில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.


இதனால், மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் (53), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் (40), சிவகங்கையை சேர்ந்த ஆனந்த முருகன் (37), மதுரையை சேர்ந்த கனி (26), திருச்சியை சேர்ந்த சிக்கந்தர் (40), திருச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (39) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.  

இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக ஊழியர் என்பதும், சிக்கந்தர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஸ்மார்ட் மேன்ஷன் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web