கோவிலுக்குச் சென்று திரும்பிய போது பரிதாபம்... சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!
ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
ஹரியானா மாநிலம் ரேவாரியில் நேற்று ரிப்பேராகி நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கார் டயர் பஞ்சரான நிலையில், காரில் இருந்தவர்கள் கார் டயர்களை மாற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
#WATCH | Haryana | Six people died, six injured in a road accident in Rewari last night. The incident occurred when the occupants of the car were changing its tyres and were hit by another car coming from behind. pic.twitter.com/0naO2WsdPy
— ANI (@ANI) March 11, 2024
நேற்று மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காது ஷியாம் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு காரில் தங்களது சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, மசானி கிராமத்திற்கு அருகே கார் சென்று கொண்டிருந்த நிலையில், காரின் டயர் பஞ்சராகி உள்ளது. அப்போது கார் டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரோஷ்னி (58), நீலம் (54), பூனம் ஜெயின் (50) மற்றும் ஷிகா (40) ஆகியோர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் விஜய் (40), மற்றும் இங்குள்ள கர்காரா கிராமத்தைச் சேர்ந்த சுனில் (24) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ரேவாரி மற்றும் குருகிராமில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!