60 சவரன் நகைகள் கொள்ளை! விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
வீட்டில் ஆள் இல்லாத நேரமாக பார்த்து பூட்டை உடைத்து 60 சவரன் நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் மதுரையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் லயன் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் பொன்ராஜ் (55). இவர் திருநகர் 3வது பேருந்து நிறுத்தத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் அமெரிக்காவிலும் மற்றொருவர் பெங்களூரில் உள்ளனர். 2 மகன்களும் தங்களுடன் இல்லாததால் பொன்ராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து தனது கடையை கவனித்து வந்தார்.
இந்நிலையில் பொன்ராஜ் நேற்று காலை வழக்கம்போல் மனைவி ராமலட்சுமியுடன் கடையில் வியாபாரம் செய்ய வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டார். பின்னர் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டில் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 சவரன் நகை கொள்ளை போனது கண்டு பதறி துடித்தார். இது குறித்து உடனடியாக திருநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் பொன்ராஜ் வீட்டிற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்,ம மனைவி இருவரும் வியாபாரத்திற்கு செல்லும் நேரத்தை தினந்தோறும் கவனித்த மர்ம நபர்கள் சிலர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!