6.79 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை!! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி !!

 
பள்ளிக்கல்வித்துறை தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு மே 5 முதல் அடுத்தடுத்து 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வு

இந்த தேர்வுகள் குறித்து என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தரும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்களும், 11 ம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்களும், 12 ம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்களும்  என மொத்தம் 6,79,467 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

தேர்வு
பொதுத்தேர்வு முடிவுகள்  திட்டமிட்டபடி வெளியிடப்படும் எனவும், அவை வெளியான பிறகு,தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல்  தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 17ம் தேதி 10ம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web