உஷார்.... 7 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!!

 
மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது .அத்துடன்  மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செப்டம்பர் 19 ம் தேதி செவ்வாய்கிழமை தமிழகம், புதுச்சேரி  காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

school rain


செப்டம்பர் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை  பெய்யக்கூடும். செப்டம்பர் 20 மற்றும் 21ம் தேதி தமிழகம், புதுச்சேரி காரைக்கால்  பகுதிகளில் ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை  பெய்யக்கூடும்.
செப்டம்பர் 22 முதல் 24 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால்  பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

rain in Northwest India

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை  பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை   மத்தியகிழக்கு  வங்கக்கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web