செம... சென்னையில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில்... மெட்ரோ ரயில் பயணிகள் உற்சாகம்..!!
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் எளிதான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை சென்னை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. நாளுக்கு நாள் சென்னையில் தினமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பேடிஎம் வாட்ஸ்அப் மற்றும் போன் பே உட்பட செயலிகள் மூலம் க்யூஆர் டிஜிட்டல் டிக்கெட் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பொதுமக்களின் தேவை அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயிலின் சேவையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நாளை நவம்பர் 27 ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!