8 விமானங்கள் தாமதம்!! சென்னை பயணிகள் கடும் அவதி!!

 
விமானம்

சென்னையில் நேற்று நள்ளிரவு  முதல் தொடர்மழை  பெய்து வருகிறது. சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்  கனமழையால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 3 விமானங்கள் பெங்களூர் திரும்பி அனுப்பப்பட்டன.  8 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் தொடங்கிய மழை  இன்று அதிகாலை வரை இடி மின்னல், சூறைக்காற்றுடன் நீடித்தது. இதனால்  சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.  

விமானம் கோ பர்ஸ்ட்

டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்தது.இதனால்  விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. 
அதை போல் ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு  தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

ஏர் இந்தியா விமானம்

இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது.  அத்துடன்  சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்க்காக், ஃபிராங்க்பார்ட், பாரிஸ்  என  3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web