8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! இந்திய ராணுவம் அதிரடி!!

 
ராணுவம்

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம்  எதிரிகளை  அவர்கள் இடத்தில் நுழைந்து துவம்சம் செய்து வருகிறது. இதில்  ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் நடுவில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, ஜம்மு காஷ்மீரில் உள்ள கோட்லியின் நக்யாலில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் 4 முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 7 முதல் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம்

 இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர் .  இந்தியாவில்  பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்கள்) மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இத்திட்டம் நடைபெறுவதற்கு முன்   இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி முழு சதியையும் முறியடித்துள்ளது.   

ராணுவம்


இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையின் 12 முதல் 15 கமாண்டோக்கள்,  குலாம் ஜம்மு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில்  இரண்டரை கிலோமீட்டர்  பயங்கரவாதிகளின் 4  ஏவுதளங்களை சோதனையிட்டனர்.   நமது ராணுவ வீரர்கள் அனைவரும் ஆபரேஷனை முடித்துக்கொண்டு தங்கள் எல்லைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் முழு வெற்றி பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web