8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து... அதிர்ச்சி வீடியோ!

 
தடம் புரண்டு விபத்து

 
 2023ல் ஒடிசாவில்  3 ரயில்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிய விபத்திற்கு பிறகு அடுத்தடுத்த விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. மிகக் குறிப்பாக  சமீப காலமாக ரயில் வழித்தடங்களில்  விபத்துக்கள் பெருகி வருவது ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் டெல்லியில் உள்ள படேல் நகர்- தயாப்ஸ்தி பிரிவில் சரக்கு ரயில் ஒன்று இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்குரயில்  ஜாகிரா மேம்பாலம் அருகே   திடீரென தடம்புரண்டு சரக்கு ரயில் விபத்திற்குள்ளானது.


சரக்கு ரயில் என்பதால் அதிர்ஷ்டவசமாக  உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  தடம் புரண்ட 8 பெட்டிகளில் உள்ள பொருட்களை அகற்றவும், ரயில் பெட்டிகளை மீட்கவும் ரயில்வே துறை மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த விபத்து காரணமாக சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்டு விபத்து

மேலும் சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த ரயில் கவிழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன  அதிக பாரம் காராணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமா என்ற கருத்துக்கள்  பரவி வருகின்றன.  அல்லது பிரேக் பெயிலர் காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web