அனல்மின் நிலைய விபத்தில் 9 பேர் பலி... தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

 
எண்ணூர் அனல்மின்

சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

எண்ணூர் அனல்மின்

இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.  

இது குறித்து முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்ட எக்ஸ் பதவில், " எண்ணூரில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பணியாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்ணூர் அனல்மின்

மின்துறை அமைச்சர் சிவகுமார் அவர்களையும், TANGEDCO தலைவர் ராக்ரி அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி  அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி  ஆணையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?