9 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு.. இளையராஜா சொந்த ஊரில் அசத்தல்!!

 
இளையராஜா

இந்தியாவின்  முண்ணனி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.   இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்ற இளையராஜா  1976ல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம்   தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். இதுவரை இவர்   4,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா
 
தற்போது பல படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். கௌரவ எம்பி பதவி இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த நிதி மூலம்   தனது சொந்த மாவட்டமான தேனியில் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இளையராஜா

இந்நிலையில், மின்விளக்கு வைக்கப்பட்டது குறித்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. எம்.பி. பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதனையடுத்து இளையராஜாவை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது. எம்.பி. ஆனதும் இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு அவருக்கு கௌரவம் செய்துவரும் நிலையில் அவரும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web