’இனிமே குடிக்காதீங்க’.. அட்வைஸ் பண்ண மனைவி.. கேட்காத கணவன்.. ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு!

 
தீக்குளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் அபிஜித் (வயது 33). இவர் அரசு ரப்பர் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் ரஞ்சிதா (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஞ்சிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதன்பின், அவரது உறவினர்கள் வளைகாப்பு செய்து, புதுநகரில் உள்ள தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றனர்.

Kanyakumari Drunken Boy Kissed Lady,குடிபோதையில் ரோட்டில் சென்ற பெண்ணை  முத்தமிட்ட வாலிபர் - கன்னியாகுமரியில் பரபரப்பு - keeriparai drunken boy  kissed lady cause great stir ...

இந்நிலையில் நேற்று முன்தினம் அபிஜித் தனது மனைவியை பார்க்க தாய் வீட்டிற்கு சென்றார். அவர் குடிபோதையில் சென்றதாக தெரிகிறது. இதைப் பார்த்த ரஞ்சிதா மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு கணவரிடம் கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார்.

கீரிப்பாறை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது.

உடல் முழுவதும் தீப்பிடித்து அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அவரை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து கணவன், மனைவி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web