வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து.. 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!!

 
நாக்பூர் விபத்து

நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிலக்கரி வெடிப்பதற்காக வெடிபொருட்களை பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து நிகழ்ந்ததில், ​​குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். விவரங்களின்படி, பஜர்கான் பகுதியில் அமைந்துள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

At Least 9 Dead After Blast At Solar Explosive Company In Maharashtra's  Nagpur

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அதிகாரிகளின் கூற்றுப்படி, குண்டுவெடிப்பு நடந்தபோது சோலார் நிறுவனத்தின் அலகுக்குள் மொத்தம் 12 தொழிலாளர்கள் இருந்தனர். நிறுவனத்தின் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Maharashtra: 9 Dead, 3 Injured In blast At Solar Explosive Company In Nagpur  - Oneindia News

இந்த விபத்தில் சம்பவ இடத்திலையே 9 பேர் இறந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துனர். இந்த வெடி விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web