பகீர் சிசிடிவி காட்சி... பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து 9 வயது சிறுமி உயிரிழப்பு ... !
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவி நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 வயதான அமய்ரா என்ற சிறுமி நேற்று (நவம்பர் 1) மதியம் 1.30 மணியளவில் பள்ளி கட்டிடத்தின் மேல்மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
जयपुर
— Akirti Panwar (@Akirtithakur) November 2, 2025
नीरजा मोदी स्कूल में छात्रा अमायरा मौत मामले में cctv video आया सामने @DcDmJaipur pic.twitter.com/EqnmsYh7dn
சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் சிறுமி தடுப்புச்சுவரில் ஏறி சில நொடிகள் அமர்ந்தபின் கீழே குதிப்பது பதிவாகியுள்ளது. 47 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் சிறுமி கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு உயிரிழந்தார். மருத்துவர்கள் கூறுகையில், சிறுமியின் உடல் உள் உறுப்புகள் கடுமையாக சேதமடைந்திருந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சம்பவ இடத்தில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
