அதிர்ச்சி... ஆட்டோ ஓட்டுனர் வங்கிக் கணக்கில் ரூ9000 கோடி.. பரபரப்பு!!

 
பணம் வடிவேலு

பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாகி விட்ட நிலையில் சில நேரங்களில் தவறுதலான  பணப்பரிவர்த்தனையும் நடைபெற்று விடும். அந்த வகையில் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ9000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   
பழனி நெய்க்காரப்பட்டியை பூர்வீகமாககொண்ட ராஜ்குமார்,  சென்னை கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை ஆட்டோ  ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.   செப்டம்பர் 9ம் தேதி மாலை 3 மணிக்கு  ராஜ்குமாரின் மொபைல் போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ9000 கோடி  டெபாசிட் செய்யஆனதாக குறுஞ்செய்தி  வந்துள்ளது.  

9000 கோடி


இதனை முதலில் நம்பாத ராஜ்குமார் தனது நண்பர்கள் விளையாடுகிறார்கள் என நினைத்து  தனக்கு வந்தது 9000    அல்லது 90000 என்ற குழப்பமே இவருக்கு நீடித்தது. வங்கி கணக்கை சரிவர பயன்படுத்தாத தனது அக்கவுண்டில் 15 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் எப்படி இவ்வளவு பணம் வந்தது எனவும் குழம்பினார்.    இதனை உறுதி செய்ய தனது நண்பருக்கு ரூ21000 ஐ அனுப்பியுள்ளார். பணமும் தனது நண்பருக்கு சென்றுவிட்டது. மீண்டும் தன்னிடம் உள்ள பணத்தை எண்ணியுள்ளார். அப்போது தான் தனது வங்கி கணக்கிற்கு வந்தது ரூ90000 அல்ல 9000 கோடி என மகிழ்ச்சி அடைந்துள்ளார்.  

9000 கோடி


  அடுத்த   சில மணி நேரங்களில் மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து   ராஜ்குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்  ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில்  தவறுதலாக ரூ9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி கணக்கில் இருந்த ரூ9000  கோடி பணத்தையும் திரும்ப எடுத்துவிட்டனர்.  தி நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும்  டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து  ரூ9000 கோடி   பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  வாடகை ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ9000 கோடி   திடீரென டெபாசிட் செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web