நண்பருடன் கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் பலி! மெரினாவில் சோகம்!

 
நீச்சல் கடல் அலை மரணம்

நண்பருடன் சேர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அஷ்ரப் (17) மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அவரது நண்பர் டேனியலும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு மெரினா கடற்கரைக்கு சென்றனர். 

death

நொச்சி நகர் டி பிளாக் எதிரில் கடலில் அஷ்ரப், டேனியல் ஆகிய இருவரும் குளித்தனர்.  அஷ்ரப் தனக்கு நீச்சல் தெரியும் அதனால் சிறிது தூரம் செல்கிறேன் எனக் கூறிவிட்டு, கடலில் குளிக்க சற்று ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ராட்சத கடல் அலை இழுத்துச் சென்றது. இதனையடுத்து அருகில் இருந்த மீனவர்கள் டேனியலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  ஆனால் அஷ்ரப்பை காப்பாற்ற முடியவில்லை. அஷ்ரப் உடல் நொச்சிக்குப்பம் 10வது பிளாக் எதிரில் கடற்கரையில் கரை ஒதுங்கியது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் மாணவன் அஷ்ரப் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web