9 வயது சிறுமிக்கு கோவிலில் பாலியல் தொல்லை !! பூசாரியை தட்டி தூக்கிய காவல்துறை!!
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், தமிழக& கேரள எல்லையை இணைக்கும் பகுதியாகும். இங்குள்ள வண்டிப் பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதில் விபின் என்ற 32 வயது பூசாரி பணியாற்றி வருகிறார். இவர் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், விபின் வல்லக்கடவு பகுதியில் வீடு எடுத்து தங்கி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு தனியாக வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பூசாரி விபின், சிறுமியை கோவிலுக்குள் உள்ள பூஜை பொருட்கள் வைக்கும் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு ஆத்தரமடைந்த பெற்றோர் பூசாரி விபின் செய்த குற்றம் குறித்து வண்டிப்பெரியாறு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், பூசாரி விபினை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட விபினை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பீருமேடு கிளைச் சிறையில் அடைத்தனர். கோவிலுக்குள் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!