ஆற்றில் சுழலில் சிக்கி சட்டக் கல்லூரி மாணவர் பலி!! குளிக்கச் சென்ற போது பரிதாபம்!!

 
தீர்த்தகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  கொண்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  குப்புசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் 24 வயது  தீர்த்தகிரி. இவர்  தர்மபுரி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தீர்த்தகிரி

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை நாள்.இதனால் நண்பர்களுடன் சேர்ந்து  கொண்டம்பட்டி அருகே பாம்பாற்றில் குளிக்கச் சென்றார். ஆற்றில் தீர்த்தகிரி குளித்துக் கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். வெகு நேரமாகியும் தீர்த்தகிரி வீடு திரும்பாததால் அவரது தந்தை அவரை தேடி வந்துள்ளார். 

அப்போது கரையில் அவரது துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் நேற்று முதல் தேடி வந்தனர்.

போலீஸ்

இதையடுத்து இன்று காலை பாவக்கல் அருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web