காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!

 
வசந்தி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள வெண்கறும்பூர் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் என்பவரின் மகன் விஜயகாந்த் (23). பிசிஏ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் வசந்தி (22). நர்சிங் முடித்துள்ள இவர் பெங்களூருவில் உள்ள ஹெல்த் கேர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 

கடலூர்

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் குறித்து அறிந்த வசந்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வேறு ஒரு இளைஞருடன் வசந்திக்கு திருமணம் செய்து வைக்க கடந்த 11-ம் தேதி அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

திருமணம்

இதில் விருப்பமில்லாத வசந்தி வீட்டை விட்டு வெளியேறிய காதலன் விஜயகாந்த் உடன் நேற்று விருத்தாசலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் கழுத்தில் மாலையுடன் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயினை சந்தித்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். அதனை தொடர்ந்து மனுவை ஏற்றுக் கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர் இரு வீட்டாரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web